காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அரியலூர், மார்ச் 27: அரியலூரில் உள்ள மகா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முன்னதாக செட்டி ஏரிக்கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பூக்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கருவறையில் கொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் மகா காளியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பூச்சொரிதல் விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: