மணப்பாறை அருகே குளக்கரையில் வீசப்பட்ட கோயில் உண்டியல், மர்ம துணி மூட்டை பொதுமக்கள் அச்சம்

மணப்பாறை, மார்ச் 19:  மணப்பாறை அடுத்த வளநாடு காவல் சரகத்தில் கடந்த மாதங்களில் வீடு புகுந்து கொள்ளை, வாகன திருட்டு, நகை கடை கொள்ளை முயற்சி, தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி என குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் வளநாடு கோவில்பட்டி லெத்த குளக்கரையில் இரண்டரை அடி உயர கோவில் உண்டியல் மற்றும் மர்ம துணி மூட்டை கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கோயில் உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்கள் பணத்தை திருடிக்கொண்டு உண்டியலை மட்டும் குளக்கரையில் வீசிச் சென்றது தெரிந்தது. அதனருகே துணி மூட்டை ஒன்றும் உள்ளதால் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. உண்டியல் எந்த கோயிலில் திருடப்பட்டது. துணி மூட்டை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வர காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: