காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி

காஞ்சிபுரம், மார்ச் 19: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 33 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 33 நிலையான கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த 66 குழுக்களின் அரசு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதுடன், 169 போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் பயன்படுத்தும் இந்த 66 வாகனங்களிலும், ஜிபிஎஸ் எனும் இருப்பிடத்தை அறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஜிபிஎஸ் கருவி மூலம், அந்த வாகனம் எங்குள்ளது, வாகனம் இயக்கப்படுகிறதா அல்லது ஒரே இடத்தில் நிற்கிறதா என்பது உள்பட பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவின் அனைத்து செயல்பாடுகளும் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க முடியும். காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: