வழிப்பறி: 3 பேர் கைது

திருச்சி, மார்ச் 15: திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் ஜின்னாபாய் ஸ்டோரை சேர்ந்தவர் தேவராஜ்(37), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (28). அதே பகுதியை சேர்ந்தவர் அஜய் (19). இவரது நண்பர் இளஞ்செழியன் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து தேவராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டு மிரட்டினர். இதுகுறித்து தேவராஜ் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: