அரசு பேருந்து மோதி மாணவர் பலி நண்பர் படுகாயம்

பேராவூரணி,  மார்ச் 15: பேராவூரணி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.  பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கருப்பமனையை சேர்நதவர் இளஞ்சேகரன். மகன் இளந்தமிழன் (16). இதே பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் பாலமுருகன் (18). இருவரும்  ஐடிஐ மாணவர்கள். நேற்று காலை இருவரும் திருச்சிற்றம்பலத்துக்கு ஒரு பைக்கில் சென்று விட்டு ஆவணம் கைகாட்டி வழியாக பேராவூரணிக்கு  சென்று கொண்டிருந்தனர்.  ஆவணம் கைகாட்டி செக்போஸ்ட் அருகில் வந்தபோது ஆட்டோவுக்கு வழிவிட முயன்றனர். அப்போது காரைக்குடியில் இருந்து திருவாரூக்கு சென்ற அரசு பேருந்து, ைபக் மீது மோதியது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளந்தமிழன் கீழே விழுந்ததில் பஸ் சக்கரம் ஏறி  தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இளந்தமிழனின் தந்தை இளஞ்சேகரன் அளித்த புகாரின்பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி

வருகின்றனர்

Related Stories: