பெரியகுளம் அருகே ராணுவவீரர் வீட்டை உடைத்து கொள்ளை

பெரியகுளம், மார்ச் 15: பெரியகுளம் அருகே சருத்திபட்டி கூட்டுறவு வங்கி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன்(57). இவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தனது இரண்டாவது மகளின் திருமணத்திற்காக வீட்டைப்பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒசூர் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 19 1/2 பவுன் தங்க நகை, நான்கு பவுன் வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். தேனி மாவட்ட காவல்துறையிலிருந்து கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் பென்னி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை செய்தது. சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: