குழந்தைகள் பாதுகாப்பு புத்தாக்க பயிற்சி

ராமநாதபுரம், மார்ச் 15: திருப்புல்லாணியில் ஊரக தொழிலாளர்கள் மேம்பாட்டு அணையம் சார்பில் ஒன்றிய அளவிலான கிராம கிளை செயல்வீரர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ஊரக தொழிலாளர்கள் மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாமில் திட்ட ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி தலைமை தாங்கினார். உறுப்பினர் பாக்கியலட்சுமி வரவேற்றார். ஒன்றிய அளவிலான கிராம கிளை சங்கத்தின் செயல் வீரர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரின் செயல்பாடுகள் பற்றிய புத்தாக்க பயிற்சி நடந்து.கிராமங்களில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணங்கள் தடுப்பது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒன்றிய உறுப்பினர் காமாட்சி நன்றி கூறினார்.

Related Stories: