ராஜபாளையம் அருகே டூவீலர்கள் மோதியதில் 2 பேர் பலி

ராஜபாளையம், மார்ச் 14:  ராஜபாளையம் அருகே, மேட்டூரை சேர்ந்த கருப்பையா மகன் பாண்டியராஜ் (19). இவரது நண்பர் பவுன்ராஜ் (15). நேற்று முன்தினம் மாலை, இருவரும் ராஜபாளையம் அருகே உள்ள அட்டை மில் முக்கு ரோடு பகுதியில், டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். டூவீலரை பாண்டியராஜ் ஓட்டினார்.அப்பகுதியில், எதிரில் வந்த ரெட்டியபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமியின் (50) டூவீலருடன், பாண்டியராஜின் டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த வெள்ளைச்சாமி, சம்பவ இடத்திலேயே ரத்த ெவள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த பாண்டியராஜ், பவுன்ராஜ் ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: