தேனி, மார்ச் 14: தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் வயிற்று வலிதாங்காமல் பெண் தற்கொலை செய்து கொண்டார்.தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் குடியிருப்பவர் செல்லப்பாண்டி மனைவி சாந்தி (39). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சாந்தி முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் மனம் வெறுத்தவர் நேற்று முன்தினம் அல்லிநகரத்தில் உள்ள தனது தந்தை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.