மனைவியை மிரட்ட தீவைத்த கணவர் பலி

கொடுமுடி, பிப். 14:     ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த வெள்ளியனை காட்டூர் வெங்கலப்பாறையை சேர்ந்தவர் மாரிசாமி (60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மணி. இவர்களுக்கு சவீதா, என்ற மகளும், பிரபு என்ற மகன் உள்ளனர்.

மாரிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி மணி கண்டித்துவந்துள்ளார்.

  இந்நிலையில் நேற்று மாரிசாமி குடிபோதையில் மணியின் பைக்கை எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதை மணி கண்டுகொள்ளாததால், அவர் குடிபோதையில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிசாமி தீ வைத்து கொ்ண்டார்.இதை பார்த்த அங்கிருந்தவர்கள் சாக்குகளை போட்டு தீயை அணைக்கமுயன்றனர்.  ஆனால் தீயை அணைக்க முடியாததால் மாரிசாமி பலியானார். இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: