நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

திருச்சி, பிப். 14: திருச்சி தில்லைநகர் வடவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அழகேசன் மனைவி மாதவி (48). இவர் நேற்று முன்தினம் தில்லைநகரில் உள்ள ஆதிபாராசக்தி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தில்லைநகர் 5வது குறுக்கு தெருவில் வரும்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேரில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் மாதவி கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்தவுடன் இருவரும் பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: