திருச்சியில் புதுப்பெண் மாயம்

திருச்சி, பிப். 14:  திருச்சியில் திருமணமான புதுப்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி  பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி விஜயா (35).  இவரது மகள் ரேணுகாதேவி (19). இவருக்கும், உறவினரான துவாக்குடி அண்ணா வளைவு  முருகன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த மாதம் 23ம் தேதி  திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி தாய்  வீட்டிற்கு வந்த ரேணுகாதேவி, கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் விஜயா, கோர்ட் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ பாத்திமா வழக்குப்பதிந்து மாயமான ரேணுகாதேவியை தேடி வருகிறார்.

Related Stories: