ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க விழா

கும்பகோணம், பிப். 14: கும்பகோணத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க அமைப்பு தின 19வது ஆண்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ருத்ராபதி தலைமை வகித்தார். பொருளாளர் ஐயப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நடராஜன், மாநில செயலாளர் மகாலிங்கம், பாபநாசம் வட்ட தலைவர் கருப்பையன், கும்பகோணம் வட்ட துணைத்தலைவர் முகமது ஜாஹிர், திருவிடைமருதூர் வட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் பேசினர். மாநில தலைவர் கங்காதரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு அளித்த குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தை மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories: