சத்தியமங்கலம், பிப்.13: சத்தியமங்கலம் அருகே நடந்து சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலியாகினர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி பார்வதி (65). இவர்களது மகள் பண்ணாரி (38) மகன் ஜோதி (35). பார்வதி, மகள் பண்ணாரி, மகன் ஜோதி மூவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில், எம்ஜிஆர் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.