கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

சூலூர்.பிப்.13: சூலூர் அருகே கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரோகினி(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அவினாசி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த  சதீஷ்(21). இவர் கல்லூரி மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்கவே தினமும்  அந்த பெண்ணை பின்தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இதை பொறுக்க முடியாத அந்த பெண் தனது வீட்டில் தெரிவித்தார். தொடர்ந்து சதீஷ் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஈவ்டீசிங் வழக்கில் சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: