கும்பகோணம், பிப். 13: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொமுச, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டலங்களின் சார்பில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மணிமாறன் தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகி குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் தொமுச பொதுச்செயலாளர் பாண்டியன், ஏஐடியுசி பேரவை துணை செயலாளர் துரைமதிவாணன், ஐஎன்டியுசி, டிஎம்சி கலியன், சிஐடியு மாநில துணை தலைவர் கண்ணன், ஐஎன்டியுசி தலைவர் வைத்தியநாதன், எச்எம்எஸ் பொதுசெயலாளர் முருகேசன், எம்எல்எப் பொது செயலாளர் பாலு, நிபச தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.