நடை பயிற்சி சென்றவர் பைக் மோதி பரிதாப பலி

மண்ணச்சநல்லூர், பிப்.13: மண்ணச்சநல்லூர் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் மகன் பாலகுமார் (45). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று பாலகுமார் மண்ணச்சநல்லூர் துறையூர் ரோட்டில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பழைய சினிமா தியேட்டர் அருகே பாலகுமார் சென்றபோது எதிரே வந்த  பைக் எதிர்பாராமல் அவர் மீது மோதியது.

இதில் பாலகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: