சாரண, சாரணியர் இயக்க தலைவராக ஆனந்தபவன் நாராயணன் நியமனம்

கடலூர், பிப். 13: கடலூர் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் மாணவர்களுக்கு மூன்றாம் நிலை பயிற்சி முகாம் கடலூர் புனித வளனார் பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவரும் ஆனந்தபவன் குரூப் உரிமையாளருமான நாராயணன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட சாரண, சாரணியர் இயக்க தலைவராக ஓட்டல் ஆனந்த பவன் குரூப்ஸ் உரிமையாளர் நாராயணன் நியமிக்கப்பட்டார். அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிச்சாமி கழுத்துப்பட்டை அணிவித்து பாராட்டினார். பள்ளி முதல்வர் அருள்நாதன் வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி முகாமில் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு சாரண, சாரணியர் இயக்கம் வரலாறு, மதிப்பிடுதல், முகாம் முதலுதவி கூடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி இன்று நிறைவு பெறுகிறது.பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலர் செல்வநாதன், பயிற்சி ஆணையர்கள் ராதாகிருஷ்ணன், கிரிஜா, அமைப்புச் செயலாளர்கள் முத்துக்குமரன், உஷாராணி, இணைச்செயலாளர் ஹேமலதா மற்றும் காந்தரூபன் ஆகியோர் செய்தனர்.

Related Stories: