ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் விவரம் சேகரிப்பு

முஷ்ணம், பிப். 13: முஷ்ணத்தில் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் விவசாயிகளின் விவரங்கள் கணினி மூலம் சேகரிப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.முஷ்ணம் வட்டத்தில் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற 28,488 விவசாயிகள் இனம் காணப்பட்டு அதற்கான விவரங்களை கணினி மூலம் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் முஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம் மேற்பார்வையில் 51 கிராமங்களில் 28 கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: