ஆலந்தூர், பிப், 13: ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்த பெண் மீது, சிமென்ட் சிலாப் விழுந்து கால் முறிந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்தூர் புதுத்தெருவில் நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வந்த ஆலந்தூர் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்றமாக கடந்த 2011ம் ஆண்டு எம்.கே.சாலை அருகே 3 அடுக்கு கொண்ட புதிய கட்டிடத்தில் திறக்கப்பட்டது. இந்த நீதிமன்ற கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் தற்போது நடக்கின்றன. இதையொட்டி, 3வது தள மொட்டைமாடியில் உள்ள குடிநீர் தொட்டியினை பொதுப்பணித் துறை ஊழியர்கள், நேற்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தொட்டியின் ஒருபகுதி மொட்டைமாடி தடுப்பில் உரசியது. இதனால், சிமென்ட சிலாப் உடைந்து கீழே விழுந்தது.