காஞ்சிபுரம், பிப்.13: தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சாம்சங் நிறுவனம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனப் பணியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை எஸ்பி சந்தோஷ் ஹதிமானி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் அண்ணா அரங்க வளாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பைக்கில் புறப்பட்டு மூங்கில் மண்டபம், பஸ் நிலையம், காந்தி சாலை, தேரடி, ரங்கசாமி குளம், விஷ்ணு காஞ்சி காவல் நிலையம், வரதராஜப் பெருமாள் கோயில், வாலாஜாபாத் வழியாக சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவனம் வரை சென்றனர். இதில், ஏடிஎஸ்பி சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.