மாவட்டம் முழுவதும் 12 தாசில்தார்கள் அதிரடி பணியிடமாற்றம்: கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம், பிப்.13: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பொன்னையா அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர் அறிக்கை வருமாறு: காஞ்சிபுரம் தாசில்தார் காஞ்சனமாலா பெரும்புதூருக்கும், பெரும்புதூர் தாசில்தார் ரவிச்சந்திரன் வாலாஜாபாத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வாலாஜாபாத் தாசில்தார் கிரிராணி கோயம்பேடு வெளிவட்டப்பாதை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும், அந்தப் பதவியில் இருந்த சங்கர் தாம்பரம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் தாசில்தார் சாந்தி, உத்திரமேரூர் தாசில்தாராகவும், உத்திரமேரூர் தாசில்தார் அகிலாதேவி இருங்காட்டுக்கோட்டை விரிவாக்கத் திட்ட நிலம் எடுப்பு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருமழிசை டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் செய்யூர் தாசில்தாராகவும், செய்யூர் தாசில்தார் ரமா , மறைமலை நகர் திட்ட நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் தங்கராஜ் காஞ்சிபுரம் தாசில்தாராவும், மெட்ரோ ரயில் திட்ட நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் ஓம்பிரகாஷ் பல்லாவரம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்லாவரம் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் செந்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தனி வட்டாட்சியராகவும், செங்கல்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மணிவண்ணன் செங்கல்பட்டு நகர நிலவரித் திட்ட வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அதிகாரிகள், உடனடியாக புதிய பணியிடத்தில் சேரவேண்டும். இந்த இடமாறுதல் ஆணையின்மீது விடுப்போ, மறுப்போ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணியிடத்தில் சேர்ந்த நாளையும் துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: