கலெக்டர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தேனி, பிப். 12: பழனிசெட்டி போலீசாரை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் மகனுடன் தீக்குளிக்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போடி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் மதுரைவீரன். இவரது மனைவி நாகரத்தினம். நேற்று இவரும், இவரது 17 வயது மகனும் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். போர்டிகோ அருகே வந்த போது அங்கே பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் நாகரத்தினத்தை விசாரித்தினர். அப்போது, அவரது பையில் மண்ணெண்ணெய் கேன் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், தீக்குளிக்க வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், `` எனது மகன் டூவீலரில் கடந்த ஆண்டு சென்றபோது விபத்தில் சிக்கி கால் எலும்பு நொறுங்கியது. இவ்விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இதுவரை முதல் தகவலறிக்கையான எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. பலமுறை போலீஸ் ஸ்டேஷன் சென்று கேட்டும் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் கலெக்டரின் கவனத்தை ஈர்க்கவே தீக்குளிக்க முயன்றோம்’’ என்றார். இதனையடுத்து நாகரத்தினத்தை தேனி போலீசார் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனுடன், தாய் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்

ளது.

Related Stories: