சமூக ஆர்வலர் வலியுறுத்தல் தந்தை இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து மகன் தற்கொலை

ராமநாதபுரம், பிப்.12: ராமநாதபுரம் தெற்கு வாணி வீதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். கடந்த 8ம் தேதி தோட்டத்தில் பாம்பு கடித்ததில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறுதி சடங்கிற்காக ராஜேந்திரன் மகன் பிரசன்னா சிங்கப்பூரிலிருந்து தாமதமாக வந்தார். தந்தையின் உடலை அடக்கம் செய்துவிட்டதாக கூறப்பட்டதும் மன உளைச்சலில் இருந்த    பிரசன்னா  நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: