வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை ₹1.5 லட்சம் திருட்டு நாட்றம்பள்ளியில் பட்ட பகலில் துணிகரம்

நாட்றம்பள்ளி, பிப்.12: நாட்றம்பள்ளியில் பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை ₹1.5 லட்ச ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட தோழ தெருவை சேர்ந்தவர் சாமராஜி(60). இவர் உப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(55). இவர்களுக்கு சங்கர்ஆனந்த், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும், சங்கர்ஆனந்த் அதேபகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அருண்குமார் கார் டிரைவாராக உள்ளார்.இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சாமராஜி மற்றும் சங்கர்ஆனந்த் வியாபாரத்திற்கு சென்றனர். செல்வராணி மற்றும் அருண்குமார் உறவினரின் இறுதி சங்கிற்கு சென்றனர்.

இதையடுத்து, மாலை 4 மணிக்கு செல்வராணியும், அருண்குமாரும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே பீரோவில் இருந்த 12 சவரன் நகை மற்றும் 1லட்சத்து 30ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, நாட்றம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரியூர் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் பன்னீர்செல்வம்(32). இவர் நேற்று காலை தனது உறவினரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட இருந்ததை கண்ட அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் நகை மற்றும் ₹5 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, பன்னீர்செல்வம் நாட்றம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: