காஞ்சிபுரம், பிப்.12: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 120 பேருக்கு ₹10,57,230 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 120 பேருக்கு, ₹10 லட்சத்து 57 ஆயிரத்து 320 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.சமூக நலத்துறை மற்றும் சத்துணவுதுறை சார்பில் திருநங்கைகள் சுயதொழில் புரிய 12 பேருக்கு ₹3 லட்சம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் 100 பேருக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ₹4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோருக்கு ₹9,600 மதிப்பில் கருவிகள், மானியத்துடன் வங்கிகடன் 14 பேருக்கு ₹3 லட்சத்து 14 ஆயிரத்து 230 மதிப்பிலும், ஆதிதிராவிட நலதுறை சார்பில் பழங்குடினர் நல வாரிய அடையாள அட்டை 12 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.