மர பொருட்கள் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

பெரும்புதூர், பிப்.12: ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் மர பொருட்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் பொருட்கள் எரிந்து  நாசமானது.பெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் மர பொருட்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தில் இருந்த கரும்புகை வந்தது. பின்னர்  புகையாக மாறி எரிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. அனைத்து பொருட்களும் கொளுந்துவிட்டு எரிந்தன.தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களில் 20க்கு மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  அதற்குள் அனைத்து பல லட்சம் மதிப்புள்ள மரப்பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது. புகரின்படி பெரும்புதூ–்ா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories: