தைப்பூச விழா-தூய இருதயஆலய தேரோட்டம்

சாத்தூர், ஜன. 22: சாத்தூரில் உள்ள 126 ஆண்டு பழமையான தூய திருஇருதய ஆலயத்தில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் 126 ஆண்டு பழமையான தூய திருஇருதய ஆலயம் உள்ளது. இங்கு புனித செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு, போதகர் மிக்கேல்ராஜ் தலைமையில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேரில், புனித செபஸ்தியார் சிலையை வைத்து, ஆலயத்தை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் தேர் சுற்றி வந்தனர்.இறுதியில் தேர் ஆலயத்தை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: