இடவசதி இல்லாத பத்திரப்பதிவு அலுவலகம் புதிய அலுவலகம் கட்டுவதற்கு கோரிக்கை

சிவகாசி, ஜன. 22: சிவகாசியில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடநெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்தசிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர். ஆவண பாதுகாப்பு அறை பாதுகாப்பற்ற நிலையில்  உள்ளதால் பத்திரங்கள் தொலைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.சிவகாசியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், இந்த தாலுகாவிற்கு உட்பட்ட காலியிடங்கள், விளைநிலங்கள், வீடுகள் மற்றும் திருமணப் பதிவுகள் பதிவு செய்ய படுகின்றன. இங்கு ஒரு சார்பதிவாளர், கண்காணிப்பாளர், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், அலுவலர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கும் மேமற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யும் பணி நடக்கிறது. விருதுநகர் மாவட்டத்திலேயே சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் அதிக வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. முத்திரை மற்றும் பதிவு கட்டணமாக, பதிவு கட்டணமாக ரூ.3 கோடி வரை பத்திர பதிவு நடக்கிறது. இது தவிர திருமணப்பதிவு, வாடகை ஒப்பந்தம், கட்டிட ஒப்பந்தம் போன்றவற்றின் மூலமும் வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்நிலையில், சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில போதிய இடவதியில்லை. இதனால், பத்திரப் பதிவிற்காக வரும் பொதுமக்கள் அலுவலகம் முன்பு காத்திருக்கும் அவலம் உள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பாதுகாக்க தனியறை இல்லை. இதனால், ஆவணங்கள் பராமரிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சார்பதிவு அலுவலகத்தில் டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவுகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது. இதனால், பத்திரப்பதிவுக்கு வருபவர்கள், அலுவலகம் திறப்பதற்கு முன்பே வந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே சிவகாசி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி  தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: