80 பெண்களுக்கு சான்று வழங்கும் விழா

திருக்கழுக்குன்றம், ஜன.22: கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தில் இயங்கி வருகின்ற “அன்னப் பூர்ணா” இலவச தையற்பயிற்சி மூலம் சுற்று வட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள 3 மாத தையற்பயிற்சியளிக்கப்பட்டது. 3 மாத பயிற்சி முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு பயற்சி முடித்ததற்கான தகுதிச்சான்று வழங்கும் விழா பயிற்சி மையத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு மையத்தின் இயக்குனர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பாளராக கலந்து கொண்ட வாயலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிங் உசேன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் வேளாண்மை பொறியாளர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: