திருவள்ளூர், ஜன. 18: தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில், பொங்கல் விழாவும், இரண்டாவது நாளில், மாட்டு பொங்கல், மூன்றாவது நாளில் காணும்பொங்கல் என ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக பூண்டி நீர்த்தேக்கம், பழவேற்காடு ஆகியவை உள்ளன.அதுமட்டுமில்லாமல் திருத்தணி, பெரியபாளையம், திருவள்ளூர், சிறுவாபுரி உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபடுவர். குறிப்பாக பூண்டி நீர்த்தேக்கத்தில் காணும்பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவர்.