ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மகப்பேறு. குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், காச நோய், மனநலம், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை என சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு காய்ச்சல் வரை ஏராளமான பிரிவுகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள் நோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. அனைத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவம் மற்றும் காய்ச்சல், அறுவை சிகிச்சை என அட்மிட் ஆகும் நோயாளிகள் ஒரு வாரமாவது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும். நோயாளிகளுடன் ஒருவர் தங்கி கொள்ள மருத்துவமனை அனுமதியளித்துள்ளது. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மூன்று வேளைகளில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. உதவியாளர்கள் வெளியிலிருந்து உணவுகளை வாங்கி வந்து சாப்பிடுகின்றனர். இதுபோல தினமும் நோயாளி மற்றும் உதவியாளர் என 1000 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடிப்பதற்காக குடிநீர் தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.