மண்டபம், டிச.11: மண்டபம் காந்திநகர் பகுதியில் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காந்திநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களும் கோயில்வாடி பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் என அனைவரும் காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள கான்கிரீட் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.