ஈரோடு, டிச. 11: கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோபி அடுத்துள்ள புதுப்பாளையம் எஸ்டிஎன்., காலனி பகுதியில் மாகாளியம்மன் கோயில், கிறித்துவ தேவாலயம் மற்றும் பள்ளி ஆகியவை உள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் சென்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.