கொடுமுடி, டிச. 11: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18 லட்சத்து 96 ஆயிரத்து 898க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் போனது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான விற்பனை நடந்தது. இதில் 110 விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் முதலில் 4 ஆயிரத்து 640 கிலோ தேங்காய்கள் ரூ.42 ஆயிரத்து 613க்கு ஏலம் போனது. இதனையடுத்து 2 ஆயிரத்து 610 கிலோ கொப்பரை ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 644க்கு ஏலம் போனது. இதில் முதல் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.105க்கும், குறைந்தபட்சமாக ரூ.94.69க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.96.95க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.09க்கும் ஏலம் நடந்தது.