கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி, டிச.11: சென்னையில் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஏராளமானோர் பங்கேற்பது என்று, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்  நேற்று கவரைப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் தலைமை தாங்கினார். தலைமை  செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வரவேற்றார்.  மாவட்ட நிர்வாகி கதிரவன், நெசவாளர் அணி நிர்வாகி நாகலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி.வேணு பேசுகையில், சென்னையில் வரும் 16ம் தேதி கருணாநிதியின் திருவுருவ சிலை திறப்புவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் வடக்கு மாவட்டம் சார்பில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும்,  கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். இதில்   முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், முன்னாள் எம்.பி., அ.கிருஷ்ணசாமி  ஆகியோர் பேசினார்கள்.  ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள், மு.மணிபாலன், சுகுமார், ரவிந்திர,    சக்திவேல், சண்முகம், பழனி, அறிவழகன்,  பூபதி, மோகன்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள்   திருமலை, தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, கோகுல்நாத்  உள்ளிட்ட ஏராளமானவர்கள்  பங்கேற்றனர். முடிவில் கீழ்முதலம்பேடு ஊராட்சி செயலாளர் கே.ஜி.கோபால் நன்றி கூறினார்.

Related Stories: