விருதுநகர், டிச.7: விருதுநகர் அருகே ஜக்கம்மாள்புரத்தில் உள்ள பூங்கா போதிய பராமரிப்பின்றி விளையாட்டு கருவிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அடிப்படை வசதி குறைபாடு, குண்டும் குழியுமான ரோடுகள், வாறுகால்கள் இல்லாததால் சாலைகளில் ஓடும் கழிவுநீர் என பல்வேறு குறைபாடுகளுடன் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி ஜக்கம்மாள் புரத்தில் சிறுவர்கள் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவிடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பூங்காவை உரிய முறையில் அமைக்காமல் ஊஞ்சல், பிளாஸ்டிக் சறுக்கல், ஏற்ற, இறக்கம் மட்டும் அமைத்து கணக்கெழுதி விட்டனர். பூங்காவிற்கு சுற்றுச்சுவர் கட்டவில்லை.