திருநங்கை போலீசை தற்கொலைக்கு தூண்டிய போலீசார் மீது நடவடிக்கை எஸ்பி.யிடம் மாதர் சங்கம் புகார்

ராமநாதபுரம், டிச.7:  ராமநாதபுரம் ஆயுதப்படை திருநங்கை போலீஸ் நஸ்ரியா அதிகாரிகளின் தொந்தரவால் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவிடம் ஜனநாயக மாதர் சங்க தலைவர் வடகொரியா, செயலாளர் கண்ணகி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸ் நஸ்ரியா கடந்த 3ம் தேதி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட வீடியோவில் இன்ஸ்பெக்டர், எஸ்ஜ, ஏட்டு ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். அந்த 3 பேர் மீதும் உயர் அதிகாரிகளிடம் ஏற்கனவே அவர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எஸ்பி நேரிடையாக இதுகுறித்து விசாரணை நடத்தி 3 போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.    

Related Stories: