கும்பகோணம், டிச. 7: கும்பகோணம் அடுத்த சாக்கோட்டையில் உள்ள மாதா கல்வி குழுமத்தின் புனித சவேரியார் நாம திருவிழா மற்றும் உலக மாற்றத்திறனாளிகள் தினவிழா நிறுவனர் அருட்தந்தை சவரிமுத்து அடிகளார் நல்லாசியுடன் கொண்டாடப்பட்டது.
விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள செயின்ட் சேவியர் கல்லூரி தங்கும் விடுதி மற்றும் செயின்ட் சேவியர் கருத்தரங்க கூடத்தை அருட்தந்தை தேவதாஸ் திறந்து வைத்தார், செயின்ட் சேவியர் பள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியை மகேஸ்வரி வரவேற்றார், மாதா கல்வி குழும தாளாளர் மரியசெல்வம், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து பேசினார்.