சாக்கோட்டை மாதா கல்வி குழுமத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

கும்பகோணம், டிச. 7: கும்பகோணம் அடுத்த சாக்கோட்டையில் உள்ள மாதா கல்வி குழுமத்தின் புனித சவேரியார் நாம திருவிழா மற்றும் உலக மாற்றத்திறனாளிகள் தினவிழா நிறுவனர் அருட்தந்தை சவரிமுத்து அடிகளார் நல்லாசியுடன் கொண்டாடப்பட்டது.

விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள செயின்ட் சேவியர் கல்லூரி தங்கும் விடுதி மற்றும் செயின்ட் சேவியர் கருத்தரங்க கூடத்தை அருட்தந்தை தேவதாஸ் திறந்து வைத்தார், செயின்ட் சேவியர் பள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியை மகேஸ்வரி வரவேற்றார், மாதா கல்வி குழும தாளாளர் மரியசெல்வம், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து பேசினார்.

தலைமை விருந்தினர் அருட்தந்தை தேவதாஸ், சிறப்பு விருந்தினர் டாக்டர் இளம்பரிதி ஆகியோர் சவரிமுத்து அடிகளாரின் சாதனை மற்றும் நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்தி வரும் தாளாளர் மரியசெல்வத்தை பாராட்டி பேசினர். விழாவில் மாதா பள்ளிகளின் அனைத்து மாணவர்களுக்கு போர்வை, சீருடைகள் வழங்கப்பட்டது, மேலும் இந்தியா சிமென்ட் நிறுவனத்தாரால் பள்ளியில் காது கேளாத 35 மாணவர்களுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது. மாதா மாற்றுதிறனாளிகள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கீதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாதா கல்விக்குழும தாளாளர் மரியசெல்வம் செய்திருந்தார்.

Related Stories: