பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

காஞ்சிபுரம், டிச. 7:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் 62 வது நினைவுதினம் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில்  அனுசரிக்கப்பட்டது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காஞ்சிபுரம் எம்எல்ஏ  எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், மாநில  வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன்  சிறுவேடல் செல்வம், குமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் மாவட்டத்தலைவர் விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன், நிர்வாகிகள் சேரன், சாலபோகம் அருள், நாதன், செந்தில்குமார், ராஜசேகர், விசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்டத் தலைவர் ஜி.வி.மதியழகன் தலைமையில் தொழிற்சங்கத் தலைவர் இராம.நீராளன், வட்டார தலைவர் சம்பத், நிர்வாகிகள் இஷ்டலிங்கம், ஆர்.குரு, வாஞ்சிநாதன், சுகுமார்,  வீரபத்கிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பு.பெ.கலைவடிவன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பாசறை செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன்,  செய்தித் தொடர்பாளர் மதிஆதவன், ஓரிக்கை டேவிட், நகர செயலாளர்கள் கவியரசு, பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமையில் இளைஞரணி மாவட்டச் செயலாளர் மகேஷ், நகர செயலாளர் ஏகாம்பரம், நிர்வாகிகள் அருள், வெங்கடேசன் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புரட்சி பாரதம் கட்சி சார்பில் காஞ்சி நகர செயலாளர் கராத்தே ராயப்பன் தலைமையில், மாவட்ட செயலாளர் தனசேகரன் , மாவட்ட துணைசெயலாளர் அன்னக்கிளி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.செல்வம், சி.செல்வம் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக சார்பில் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமையில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் பத்மநாபன், சதீஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி தலைமையிலும், மதிமுக சார்பில் பேரூர் செயலாளர் பாரத் ராஜேந்திரன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு:  அம்பேத்கரின் 62வது நினைவு நாளையொட்டி செங்கல்பட்டு மாவட்ட நிதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்த லீலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்க தலைவர் சொக்க லிங்கம், செயலாளர் சையது உஸ்மான் மற்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.  காங்கிரஸ் நகர் தலைவர் பாஸ்கர் மாலை அணிவித்தார், நிர்வாகிகள் ஜெயராமன், முருகன் குமரவேல், உள்பட பலர் கலந்துகொண்டனர்.  புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், நகர செயலாளர் சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். திருப்போரூர்: அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி திருப்போரூர் ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், செய்தி தொடர்பாளர் வேதா அருள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புரட்சி பாரதம் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் லோகு, நகர செயலாளர் ஏழுமலை ஆகியோர் மாலை அணிவித்தனர்.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், அஜய் மோகன், திருப்போரூர் நகர தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். மேலும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது. வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூர் புரட்சி பாரதம் கட்சி சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் தனசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேரூர் செயலாளர் சூப்பர் சுகன், பேரூர் தலைவர் திலீபன் மற்றும் புரட்சி பாரத கட்சியின் பேரூர் நிர்வாகிகள் ராவ், சதாசிவம், மதன், விஜயன், விஜயதர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: