பாபநாசம் பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பாபநாசம், டிச. 6: பாபநாசம் பகுதியில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒருவாரமாக விட்டு விட்டு மழை ெபய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை ெபய்தது. ெதாடர்ந்து நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மழை விவசாயத்துக்கு பயன்பெறும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: