அரியலூர்,டிச.6: திருச்சி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதவது: விதை உரிமமம் பெறாமல் முந்திரி, மாபலா, நெல்லி, தென்னை மற்றும் பழ மரகன்றுகளை விற்பனை செய்வது விதை தரக்கட்டுபாட்டு ஆணை, 1983-ன்படி குற்றமாகும். விவசாயிகளின் நலன் கருதி பழ மரகன்றுகளை விற்பனை செய்பவர்கள் விதை தரக்கட்டுபாட்டு ஆணையிகீழ் விதை வணிக உரிமம் பெற்றுதான் விற்பனை செய்யவேண்டும்.