போக்குவரத்துக்கு இடையூறு 3 மாடுகளை பிடித்து சென்ற போலீசார்

சிதம்பரம், டிச. 6: சிதம்பரம் காந்தி சிலை பகுதி, ரயில்நிலைய சாலை, தெற்குவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. சிதம்பரம் தெற்கு சன்னதி மற்றும் கீழசன்னதி பகுதியில் அகத்தி கீரை விற்பவர்களால் மாடுகள் சாலையிலேயே திரிகின்றன. மாடுகளால் நகரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனையொட்டி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க டிஎஸ்பி பாண்டியன் உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று சிதம்பரம் தெற்கு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 3 மாடுகளை போக்குவரத்து போலீசார் பிடித்து சென்று காவல் நிலையத்தில் கட்டி போட்டு வைத்துள்ளனர். மாடுகளை சாலையில் அலைய விடுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: