3 மோட்டார் சைக்கிள் திருட்டு

கள்ளக்குறிச்சி, டிச. 6: கள்ளக்குறிச்சி எம்ஆர்என் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(44). சம்பவத்தன்று இவர் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது காணவில்லை. இது குறித்து செந்தில்குமார் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு அடுத்த சிறுகனை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு மகன் பிரசாந்த்(20). சம்பவத்தன்று

இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன், தனது பைக் நிறுத்தியிருந்தார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.

இது குறித்து பிரசாந்த் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கைலாசபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(37). சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்படடிருந்த இவரது பைக்கை காணவில்லை.இது குறித்து சிவக்குமார், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: