பெரம்பலூரில் பஸ் நிலையத்தில் பயணிகள் அச்சம்மணப்பத்தூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினவிழா

செந்துறை, நவ. 15:  செந்துறை அருகில் உள்ள மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி சார்பில் குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கபடி, பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவிய போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்தனகுமார், குழுமூர் தொடக்கப்பள்ளி  தலைமையாசிரியர் ராவணன், இலைக்கடம்பூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கொளஞ்சிநாதன், அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தனவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செயராமன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: