முத்துப்பேட்டை, நவ.14: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீபகாலமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் பொதுமக்களுக்கு குடிநீர், சாலை தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பபட்டுள்ளது. இந்தநிலையில் முத்துப்பேட்டை தமுமுக சார்பில் நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் நவாஸ், நகர செயலாளர் சீமான் உள்ளிட்டோர் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவளிதனர். அதில் முத்துப்பேட்டை பேருராட்சி செயல்பாடுகள் இன்றி உள்ளது.