தாதனேந்தல் சாலையில் திடீர் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம், நவ.14:ராமநாதபுரம் அருகே தாதனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சிக்குட்பட்ட தாதனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வயல்களுக்கு தண்ணீர் செல்வதற்காக ரோட்டின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மடையின் குழாய் உடைந்து ரோட்டில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் இவ்வழியாக டூவீலர்களில் செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை சரிசெய்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: