ராமநாதபுரம், நவ.14:ராமநாதபுரம் அருகே தாதனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சிக்குட்பட்ட தாதனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வயல்களுக்கு தண்ணீர் செல்வதற்காக ரோட்டின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மடையின் குழாய் உடைந்து ரோட்டில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது.