மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

ஸ்ரீபெரும்புதூர், நவ. 14: படப்பை அறம் பவுண்டேஷன் மற்றும்  எழில்சோலை சமூக அறக்கட்டளை சார்பில் குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம், வைப்பூர், செரப்பணஞ்சேரி, வட்டம்பாக்கம் பகுதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா, அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அறம் பவுண்டேஷன் நிருவனர் மணிவண்ணன் தலைமை வகித்தார். எழில்சோலை சமூக அறக்கட்டளை தலைவர் மாசிலாமணி வரவேற்றார். அரக்கட்டளை இயக்குனர்கள் பூங்காவனம், ஷீலா மணிவண்ணன், வெங்கடேசன், ஜெய்குமார், பாலகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருள் அப்பளம் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் சந்திரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Stories: