இரட்டை கொலையில் மேலும் ஒருவர் கைது

ராமநாதபுரம், நவ. 12: ராமநாதபுரத்தில் கடந்த அக்.16ம் தேதி வாலாந்தரவை சேர்ந்த கார்த்திக், ராமநாதபுரம் விக்னேஸ்வரன் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலையில் நயினார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் 5 பேர் சரணடைந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கார்த்திக் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

இதற்கிடையே மதுரை கோர்ட்டில் ஒருவரும், புதுக்கோட்டையில் ஒருவரும் சரணடைந்தனர். இதில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி ராமலிங்கபுரத்தை சேர்ந்த தயராஜ் (23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: