ராமநாதபுரம், நவ. 12: ராமநாதபுரத்தில் கடந்த அக்.16ம் தேதி வாலாந்தரவை சேர்ந்த கார்த்திக், ராமநாதபுரம் விக்னேஸ்வரன் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலையில் நயினார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் 5 பேர் சரணடைந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கார்த்திக் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.