பரமக்குடி, நவ.12:பரமக்குடியில் தினகரன் செய்தி எதிரொலியாக மீண்டும் சுரங்க பாதை அமைக்கும் பணி தொடங்கியது.பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மதுரை-ராமேஸ்வரம் ரயில் பாதை செல்வதால் கேட் அடைக்கும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ரயில்வே பாலத்திட்டம் 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ரயில் பாதையில் இரண்டு புறங்களிலும் தடுப்புச்சுவர் கட்டியதால் மக்கள் நகர் பகுதிக்குள் செல்வதற்கு கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.