ரயில்வே சுரங்கபாதை பணி துவக்கம்

பரமக்குடி, நவ.12:பரமக்குடியில் தினகரன் செய்தி எதிரொலியாக மீண்டும் சுரங்க பாதை அமைக்கும் பணி தொடங்கியது.பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மதுரை-ராமேஸ்வரம் ரயில் பாதை செல்வதால் கேட் அடைக்கும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ரயில்வே பாலத்திட்டம் 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ரயில் பாதையில் இரண்டு புறங்களிலும் தடுப்புச்சுவர் கட்டியதால் மக்கள் நகர் பகுதிக்குள் செல்வதற்கு கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

பொன்னையாபுரம், பாலன் நகர், பாம்புவிழுந்தான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் தடுப்புச்சுவர் ஏறி உயிர் பாதுகாப்பு இல்லாத நிலையில் ரயில் பாதையை கடந்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் இரண்டு தடவை செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று சுரங்க பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

Related Stories: